தேடுதல் இணையதளமான கூகுள் நிறுவனம் நில வரைபடப் போட்டி நடத்தியபோது விதிகளை மீறிய விவகாரம் - சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை
Jul 28 2014 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேடுதல் இணையதளமான கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நில வரைபடப் போட்டி நடத்தியபோது விதிகள் மீறப்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
நில வரைபடப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பதிவு செய்த இந்திய வரைபடத்தில் தடை செய்யப்பட்ட வரைபடங்களை அனுமதியின்றி வெளியிட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது இந்திய நில அளவை அலுவலகம் புகார் அளித்துள்ளது. இதில், தேசிய வரைபட கொள்கை 2005-ன் படி அனுமதியின்றி நாட்டின் பரப்பளவை அளவிடவும், வரைபடம் தயாரிக்கவும் தனிநபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது ராணுவப் பயிற்சி மையங்கள், அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளை போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விசாரணை நடத்திய டெல்லி போலீசார், இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியுள்ளது.