இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக கடவுள் தேர்ந்தெடுத்துள்ளதாகப் பேச்சு : ராமர் கோயில் கும்பாபிஷேக விழா குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வ பதிவு
Jan 12 2024 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமர் கோயில் கும்பாபிஷேக விழா தொடர்பாக பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கருத்துகளை பதிவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. அதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கருவியாக கடவுள் தன்னை தேர்ந்தெடுத்ததாகவும், இதை மனதில் கொண்டு 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குவதாகவும் கூறியுள்ளார். பொதுமக்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் தேடுவதாகக் கூறியுள்ள பிரதமர், இந்த உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மிகவும் கடினம் என்று பதிவிட்டுள்ளார்.