புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியா பதவி நீக்கம் - அந்தமான்-நிகோபார் துணைநிலை ஆளுநர் அஜய்குமார் சிங், புதுவை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு
Jul 12 2014 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த திரு. வீரேந்திர கட்டாரியா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தமான்-நிகோபார் துணைநிலை ஆளுநர் திரு. அஜய்குமார் சிங், புதுவை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற பின்னர், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்ற முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சில மாநிலங்களின் ஆளுநர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக இருந்த திரு. வீரேந்திர கட்டாரியா, ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக குடியரசு தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்பொறுப்பை, தற்போது அந்தமான்-நிகோபார் துணை நிலை ஆளுநராக உள்ள திரு. அஜய்குமார் சிங் கூடுதலாக கவனிப்பார் என்றும் அந்த செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.