மும்பையில் உள்ள மால்கள், தியேட்டர்கள், உணவகங்கள் வரும், 27ம் தேதி முதல், 24 மணிநேரமும் செயல்படும் - மஹாராஷ்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல்
Jan 23 2020 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் உள்ள மால்கள், தியேட்டர்கள், உணவகங்கள் ஆகியவை, வரும், 27ம் தேதி முதல், 24 மணிநேரமும் செயல்பட, மஹாராஷ்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள, உணவகங்கள், மால்கள், தியேட்டர்கள் ஆகியவை, 24 மணிநேரமும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், 24 மணிநேரமும் இயங்கும் மும்பை என்ற திட்டத்திற்கு, மாநில அமைச்சரவை, ஒப்புதல் அளித்தது. இந்த முடிவால், வருவாய் அதிகரித்து, வேலை வாய்ப்புகள் உருவாகும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசு, ஒப்புதல் வழங்கி இருந்தாலும், 24 மணிநேரமும், கட்டாயமாக இயங்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் யாருக்கும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.