நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் தேதியை மீண்டும் விடுமுறை தினமாக அறிவித்தது ஜார்கண்ட் அரசு
Jan 23 2020 8:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விடுமுறை தின பட்டியலில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் தேதியை மீண்டும் பொது விடுமுறை தினமாக ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்தது.
ஜார்கண்டில் நேதாஜி பிறந்த நாளை கடந்த 2014-ஆம் ஆண்டு வரை விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2015-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையில், இந்த தினம் பொது விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராஞ்சியில் நடைபெற்ற ஒரு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த மாநில முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன், ஜனவரி 23-ஆம் தேதியை பொது விடுமுறை தினமாக அறிவித்து உத்தரவிட்டார். அதன்படி, முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேதாஜியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மாநிலத்துக்கும், தேசத்துக்கும் சேவை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என முதல்வர் சோரன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.