காஷ்மீர் விவகாரம் : மூன்றாம் நாடு தலையிட அனுமதியில்லை - டிரம்ப்பின் சமரச முயற்சிக்கு இந்தியா பதிலடி
Jan 23 2020 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்த கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் பிரச்சினையில் இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் மத்தியஸ்தராக இருந்து பிரச்னையை தீர்க்க தயாராக இருப்பதாக டிரம்ப் டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், ஏற்கனவே டிரம்ப்பின் சமரச முயற்சியை ஏற்காத இந்தியா, மீண்டும் நிராகரித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும், உள்ளது. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என கூறியுள்ளது. பயங்கரவாத ஆதரவை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது என கூறியுள்ளது.