கடைசி ஆசையை தெரிவிக்காத நிர்பயா குற்றவாளிகள் : திகார் சிறைத்துறை
Jan 23 2020 2:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் வரும் 1-ம் தேதி தூக்கிலிடப்பட உள்ள நிலையில், தங்களது கடைசி ஆசையை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவதாக திகார் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில், மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், வரும் 1-ம் தேதி காலை 6 மணிக்கு, குற்றவாளிகள் நான்கு பேருக்கு ஒரே நேரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. குற்றவாளிகள் தாக்கல் செய்த கருணை மனு, மேல் முறையீட்டு மனு ஆகியவை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, வரும் 1-ம் தேதி தூக்கிலிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதை அடுத்து, குற்றவாளிகள் நான்கு பேரிடம், டெல்லி திகார் சிறைத் துறை அதிகாரிகள் கடைசி ஆசை குறித்து கேட்டுள்ளனர். இதற்கு, குற்றவாளிகள் எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, தூக்குத் தண்டனைக்கு ஆளாகும் குற்றவாளியின் கடைசி ஆசை நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.