ராமர் பாலம் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
Jan 23 2020 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமர் பாலம் தொடர்பாக, பா.ஜ.க. எம்.பி. திரு. சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அவர், அதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், 3 மாதங்களுக்குப் பின் மனுவை மீண்டும் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.