ராஜபாதையில் அணிவகுத்து வந்த பல்வேறு மாநிலங்களின் கலாச்சார ஊர்திகள் - எல்லைக்காவல் தெய்வ சிலையுடன் அணிவகுத்த தமிழக ஊர்தி
Jan 26 2020 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் சார்பில் கலாச்சார ஊர்தி அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
டெல்லி குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் சார்பில், எல்லை காவல் தெய்வமான அய்யனார் சிலையுடன் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆந்திரா, ஒடிசா, மத்தியப்பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் கலாச்சார ஊர்திகள் அணிவகுத்து வந்தன.