கொரோனா பாதிப்பு எதிரொலி - சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர ஏர் இந்தியா சிறப்பு விமானம் தயார்
Jan 28 2020 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர, ஏர் இந்தியா சிறப்பு விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் பரவி வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், வுஹான் நகருக்கு, மக்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வுஹான் நகரில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களை, இந்தியா அழைத்துவர, ஏர் இந்தியா சிறப்பு விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வுஹான் நகரிலிருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதால், சீன அரசின் அனுமதி கிடைத்தவுடன், ஏர் இந்தியா விமானம், டெல்லியிலிருந்து சீனா புறப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.