நிர்பயா வழக்கு குற்றவாளிகள், குடும்பத்தினருடன் இறுதியாக சந்திப்பது குறித்து தெரிவிக்கலாம் - திஹார் சிறை நிர்வாகம் கடிதம்
Feb 22 2020 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகள், தங்கள் குடும்பத்தினரை இறுதியாக சந்தித்து பேசுவது குறித்து தெரிவிக்குமாறு, திஹார் சிறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும், வரும் 3-ம் தேதி காலை, 6 மணிக்கு ஒரே நேரத்தில் தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள், தங்கள் குடும்பத்தினரை இறுதியாக எப்போது சந்திக்க விரும்புகிறார்கள் எனக் கேட்டு, திஹார் சிறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. கடந்த ஒன்றாம் தேதிக்கு முன்னரே குடும்பத்தினரை சந்தித்து விட்டதாக, முகேஷும், பவனும் தெரிவித்துள்ள நிலையில், எஞ்சியுள்ள அக்ஷய், வினய் ஆகியோரின் விருப்பத்தை சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.