புதுச்சேரி ஏ.டி.எம் எந்திரத்தில் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞர் : லேப்டாப், போலி ஏ.டி.எம் அட்டைகள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
Feb 22 2020 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி ஏ.டி.எம் எந்திரத்தில் ரகசிய எண்னை தெரிந்துகொள்ள கருவி பொருத்திய நைஜீரியா இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஏ.டி.எம் எந்திரத்தில், எலெட்ரானிக் பொருள் ஒன்று இணைக்கப்பட்டிருந்ததை அறிந்த பொதுமக்கள், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நைஜீரியா இளைஞர் ஜேஷர் செலஸ்டின் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லேப்டாப்,போலி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செயப்பட்டன.