கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக, சிங்கப்பூருக்கு யாரும் செல்ல வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
Feb 23 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக, சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அண்டை நாடான சீனாவில், கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய நோயினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு. ராஜிவ் கவுபா, சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு, விமான நிலையங்களில் பரிசோதனைத் தொடரும் என்றும், வரும் திங்கட்கிழமை முதல், நேபாளம், மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும் திரு. ராஜிவ் கவுபா கூறினார்.