உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
Feb 24 2020 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
36 மணி நேர அரசு முறை சுற்றுப்பயணமாக, இந்தியாவிற்கு முதன்முறையாக வருகைத் தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா தனி விமானம் மூலம் புறப்பட்டனர்.
ஆக்ரா விமான நிலையத்தில் வந்திறங்கிய அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவை, உத்தர பிரதேச மாநில ஆளுநர் திருமதி. ஆனந்தி பென் படேல், மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது, மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை, டிரம்ப் தம்பதி கண்டுகளித்தனர். இதையடுத்து, தாஜ்மகாலை காண சாலை வழிப் பயணத்தை அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா மேற்கொண்டனர்.