சோனியா தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் : டெல்லி நிலவரம் குறித்து ஆலோசனை
Feb 26 2020 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து, திருமதி. சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து, அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் திரு.சக்தி சின் கோஹிலை அழைத்து, திருமதி. சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து. திருமதி. சோனியா தலைமையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், திருமதி. பிரியங்கா வதேரா, திரு. ப.சிதம்பரம், திரு. ஜோதிர் ஆதித்யா சிந்தியா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திரு. ராகுல் காந்தி, இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. டெல்லி வன்முறையைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது.