இந்திய மக்கள் மிகவும் அன்பாக வரவேற்றனர் : மாணவர்கள் மத்தியில் மெலானியா ட்ரம்ப்
Feb 26 2020 9:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுக்கு முதன்முறையாக வந்த தன்னை, மக்கள் மிகவும் அன்பாக வரவேற்றனர் என மாணவர்கள் மத்தியில் மெலானியா ட்ரம்ப் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மனைவி மெலனியா, தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா அரசுப் பள்ளிக்கு சென்றார். அவரை, பள்ளிக் குழந்தைகள், பூங்கொத்து அளித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளியின் சிறப்பம்சங்களை சுற்றி பார்த்த அவர், மாணவர்களுக்கு அளிக்கப்படும், தியானம், யோகா, விளையாட்டு பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார். மகிழ்ச்சியான பாடத்திட்டம் குறித்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய மெலனியா, இது எனது இந்தியாவுக்கான முதல் பயணம் ஆகும் எனவும் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள் எனக்கூறினார்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, பள்ளியில் நேரம் செலவிட்டார்.