டெல்லி போராட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால்தான், தலைமை காவலர் பலி - பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி
Feb 26 2020 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற வன்முறையில், துப்பாக்கி குண்டு பாய்ந்ததால்தான், தலைமை காவலர் ரத்தன் பலி ஆனதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில், 42 வயதான தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். அவர், கல்வீச்சில் காயமடைந்து இறந்ததாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், நேற்று வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், ரத்தன் லாலில் இடது தோளில் குண்டு பாய்ந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வன்முறையாளர்கள் துப்பாக்கியால் சுட்டதால், அவர் உயிரிழந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.