டெல்லியில், கலவரத்தை கட்டுக்‍குள் கொண்டுவர, காவல்துறைக்‍கு முழு அதிகாரம் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்

Feb 26 2020 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில், நிலைமையை கட்டுக்‍குள் கொண்டுவர, காவல்துறைக்‍கு முழு அதிகாரம் அளிக்‍கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை, 18-ஆக இருந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக Guru Teg Bahadur மருத்துவமனை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 20-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில், நிலைமையை கட்டுக்‍குள் கொண்டுவர, காவல்துறைக்‍கு முழு அதிகாரம் அளிக்‍கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல் தெரிவித்துள்ளார். வன்முறை அதிகரித்து வரும் சில இடங்களில், கலவரக்‍காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யமுனா விஹார் உள்ளிட்ட வன்முறை பரவிவரும் சில பகுதிகளில், இந்த உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி கலவர பகுதிகளை நேரில் பார்வையிட்ட திரு. அஜித் தோவல், நேற்றிரவு, அதுகுறித்து ஆலோசனையும் நடத்தினார். கடந்த 24 மணிநேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இது தொடர்பாக 3 முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், டெல்லி நிலவரம் குறித்து, மத்திய அமைச்சரவைக்‍கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00