டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் வெளியாட்கள் புகுந்து கலவரத்தை தூண்டியுள்ளனர் : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Feb 27 2020 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில், வெளியாட்கள் புகுந்து கலவரத்தை தூண்டியுள்ளதாக, முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி வன்முறை குறித்து, அம்மாநில சட்டப்பேரவையில் பேசிய, முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பத்திற்கு, டெல்லி அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். டெல்லி மக்கள் வன்முறையை விரும்புவதில்லை எனத் தெரிவித்த அவர், தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்திற்கு வெளி இடங்களிலிருந்து வந்த சமூக விரோதிகளே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

வடகிழக்கு டெல்லியில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உ‌த்தரவிட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் திரு. மணீஷ் சிசோடியா ஆய்வு செய்தனர். அப்‍போது, அப்பகுதி மக்களிடம் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தனர். வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லாலின் குடும்பத்திற்கு, பா.ஜ.க., சார்பிலும் 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00