குருவாயூர் கோவில் 84 வயது ஜம்போ பத்மனாபன் ஆண் யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
Feb 27 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் குருவாயூர் கோவிலை சேர்ந்த 84 வயதான ஜம்போ பத்மனாபன் என்ற ஆண் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
யானைகளில் மிகவும் வயது முதிர்ந்த கம்பீரமான யானையாக பத்மனாபன் இருந்ததால், அதற்கு கஜராஜ ரத்தினம் என்ற பட்டம் வழங்கப்பட்டது. கடந்த 1954-ம் ஆண்டு, பத்மனாபன் யானை கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டது. கோவிலின் உற்சவ மூர்த்தியை தனது தலையில் சுமந்து வலம் வந்து புகழ் பெற்ற பத்மனாபன், கடந்த ஆண்டு கொச்சியில் நடைபெற்ற திருவிழாவில் காட்சியளிக்க, 4 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், உடல் நலக்குறைவால் உயிரிழந்த பத்மனாபனுக்கு, மலர்கள் மற்றும் மஞ்சள், குங்குமம் வைத்து பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.