தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு
Feb 27 2020 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பிரதமர் திரு. மோதி, பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார், டெல்லி முதலமைச்சர் திரு. கெஜ்ரிவால் உள்ளிட்டோரின் தேர்தல் வெற்றிக்குக் காரணமானவர் எனக் கூறப்படுகிறது. இவர் மீது சாஸ்வத் கவுதம் என்பவர், பீகார் தலைநகர் பாட்னாவில், மோதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வளர்ச்சியை நோக்கி பீகார் என்ற தன்னுடைய கருத்துருவை, பிரசாந்த் கிஷோர் திருடிப் பயன்படுத்திக் கொண்டதாகக் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரை, நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்காக, பிரசாந்த் கிஷோர், அண்மையில் இயக்கம் ஒன்றை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.