பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிய நிரவ் மோடியின் காவல் மார்ச் 24-ம் தேதி வரை நீட்டிப்பு
Feb 27 2020 9:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிய, நிரவ் மோடியின் காவல் மார்ச் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியை நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜாமின் கோரி நிரவ்மோடி தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், காவல் நிறைவடைந்ததையடுத்து, அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மார்ச்-24ம் தேதி வரை காவலை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.