டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கின்றன : ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் வேதனை
Feb 28 2020 11:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி வன்முறை காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் வருத்தம் அளிப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பேசிய, அண்டோனியோ கட்ரசின் செய்தி தொடர்பாளர் Stephane Dujarric, டெல்லியில் நடைபெற்ற வன்முறை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என கூறினார். கலவரத்தில், 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த அவர், வன்முறை காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரசுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். டெல்லி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு படையினர் பொறுப்புடன் நடந்தக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.