கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலி - இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி
Feb 28 2020 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 83 புள்ளிகள் சரிந்து, 38 ஆயிரத்து 662 புள்ளிகளுக்கும், தேசிய பங்குசந்தை நிஃப்டி, 312 புள்ளிகள் குறைந்து, 11 ஆயிரத்து 321 புள்ளிகளுக்கும் வர்த்தகம் ஆகின. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 காசுகள் சரிந்து 71 ரூபாய் 94 காசுகளாக இருந்தது.