கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இந்திய அரசு
Feb 28 2020 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பான், தென்கொரியா நாட்டிற்கு உடனடி விசா வழங்கும் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜப்பான், தென்கொரியா நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால், அந்நாடுகளுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரிய நாட்டு பயணிகளை அழைத்து வர வேண்டாம் விமான நிறுவனங்களுக்கு குடியுரிமை துறை அறிவுறுத்தியுள்ளது.