தேசிய அறிவியல் தினத்தையொட்டி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோதி வாழ்த்து
Feb 28 2020 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. மோதி, இந்தியாவின் கண்டுபிடிப்புகள் உலகிற்கு பயனுள்ளவையாக இருப்பதாக கூறியுள்ளார்.
தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி, இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விஞ்ஞான ஆராய்ச்சிக்காகவும், பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் ஏதுவான சூழல், நாட்டில் நிலவுவதாக கூறியுள்ளார்.
அறிவியல் ஆய்வுகளை நோக்கி இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள பிரதமர், அறிவியல் மீதான இளைஞர்களின் ஆர்வம் இன்னும் வளரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்களை தேசிய அறிவியல் மாநாட்டில் தாம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோதி, தேசிய அறிவியல் தினத்தில் அதனை மீண்டும் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.