கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு
Feb 28 2020 9:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.
சீனாவை அச்சுறுத்திய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருவதன் எதிரொலியாக, சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. ஷாங்காய், டோக்கியோ, சியோல், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை கடந்த நான்கு நாட்களாக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்றும், வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,448 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவை சந்தித்து, 38,297 புள்ளிகளாக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 431 புள்ளிகள் சரிவடைந்து, 11,201 புள்ளிகளாக வர்த்தகமானது. இந்த வீழ்ச்சியால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.