ஊதிய தேதி நெருங்கியதால் பொதுத்துறை வங்கிகள் போதுமான நிதியை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் - மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தல்
Mar 31 2020 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊதிய தேதி நெருங்கியுள்ளதால், அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தேவையான நிதியை கையிருப்பு வைத்திருக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு, உரிய தேதியில், முழு ஊதியத்தையும் அளிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலும் முதல் தேதியன்று பல்வேறு நிறுவனங்களும், ஊதியம் வழங்குவதால் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். மேலும், விவசாயிகள், முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையும், இந்த காலகட்டத்தில், வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும். இதை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, தேவையான நிதி கையிருப்பு வைத்திருக்குமாறு, அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும், மத்திய நிதி அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.