டெல்லி, உத்தரப்பிரதேசத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை - நட்சத்திர ஓட்டல்களில், அரசு சார்பில், அறைகள் முன்பதிவு
Mar 31 2020 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை தனிமைப்படுத்த, 5 நட்சத்திர ஓட்டல்களில், அரசு சார்பில், அறைகள், முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அங்குள்ள லலித் சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்படவுள்ளனர். இதற்காக, லலித் ஓட்டலில் அரசு சார்பில் 100 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தை பொருத்தவரை, லக்னோவில் உள்ள ஹையத் ரீஜென்சி, ஃபேர் ஃபீல்டு உள்ளிட்ட ஓட்டல்களில், அரசு சார்பில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், இந்த ஒட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அதற்கான செலவை அரேச ஏற்கும் என்றும் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச அரசுகள் அறிவித்துள்ளன.