நடப்பு நிதியாண்டு இன்றுடன் நிறைவு : வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக வெளியான தகவல் தவறானது என மத்திய நிதியமைச்சகம் தகவல்
Mar 31 2020 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடப்பு நிதியாண்டு, இன்றுடன் நிறைவடைவதாகவும், வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக வெளியான தகவல் தவறானது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டம் நிதியாண்டாக பின்பற்றப்படுகிறது. வணிக நோக்கில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், இந்த நிதியாண்டை பின்பற்றுகின்றன. மார்ச் 31-ம் தேதியுடன் கணக்கை முடித்து, ஏப்ரல் 1-ம் தேதியில் புதிய கணக்கை தொடங்குவர்.
இதனிடையே, தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால், வரும் ஜூன் மாதம் வரை, நிதியாண்டு நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. நடப்பு நிதியாண்டு, இன்றுடன் நிறைவடைவதாக தெரிவித்துள்ளது. இன்றுடன், இந்த நிதி ஆண்டுக்கான கணக்கு முடிந்து, நாளை முதல் புதிய கணக்கு தொடங்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.