டெல்லியில் அரசு புற்றுநோய் சிகிச்சை மைய மருத்துவருக்கு கொரோனா : மருத்துவமனை மூடல் - தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள்
Apr 1 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில், அரசு மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பணியாற்றிய மருத்துவமனை மூடப்பட்டது.
பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த சகோதரரிடம் இருந்து, டெல்லி அரசு புற்றுநோய் சிகிச்சை மைய மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மருத்துவர் பணிபுரிந்த மருத்துவமனை மூடப்பட்டது. மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள், பணியாற்றிய உதவியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.