இன்று இரவு 9 மணிக்கு ஒளியேற்ற வேண்டுமென பிரதமர் அறிவித்திருப்பது பா.ஜ.க.வின் சுயலாபத்திற்காக - கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாராசாமி குற்றச்சாட்டு

Apr 5 2020 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவால் ஏற்பட்ட இருளை அகற்ற இன்று இரவு 9 மணிக்கு ஒளியேற்ற வேண்டுமென பிரதமர் அறிவித்திருப்பது, பாரதிய ஜனதா கட்சியின் சுயலாபத்திற்கான மறைமுகத் திட்டமென கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் திரு.குமாராசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா என்ற இருளை அகற்ற இன்று இரவு சுடர் ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அறிவிப்பை எதிர்க்‍கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், பிரதமரின் இந்த வேண்டுகோளில், பாரதிய ஜனதா கட்சியின் சுயலாபத்துடன் கூடிய மறைமுகத் திட்டம் ஒளிந்திருப்பதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் திரு.குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நாளை பிரதமர் தேர்ந்தெடுக்க அறிவியல் பூர்வமான காரணம் மற்றும் ஆதாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர், பாரதிய ஜனதா கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 6-ம் தேதிக்கு முதல் நாள் இரவு மக்கள் அனைவரும் ஒளியேற்ற வேண்டும் என சுயலாபத்துடன் பிரதமர் மோதி அறிவித்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா பாதிப்பை எதிர்கொண்டு போராடி வரும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகளையும், கவசங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்காமலும், கொரொனா தொற்றை பரிசோதனை செய்ய தேவையான உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்காமலும் உள்ள மத்திய அரசு, வைரஸ் தாக்குதல் போன்ற பேரழிவு பிரச்சனையைக் கூட கட்சியின் சுய லாபத்துக்கு பயன்படுத்துவதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00