ஏா் இந்தியாவின் குறிப்பிட்ட 4 விமானங்களில் கடந்த மார்ச் மாதம் பயணித்தவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு - யாருக்காவது கொரோனா பாதிப்பு உறுதியானால் எஞ்சிய பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுகோள்
Apr 6 2020 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏா் இந்தியாவின் குறிப்பிட்ட 4 விமானங்களில் கடந்த மார்ச் மாதம் பயணித்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், சம்மந்தப்பட்ட விமானங்களில் பயணித்தவா்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 22-ம் தேதி மும்பையில் இருந்து டெல்லி சென்ற ஏஐ-101 விமானத்தில் பயணித்த ஒருவருக்கும், 23-ம் தேதி டெல்லியிலிருந்து பாட்னா சென்ற ஏஐ-415 விமானத்தில் பயணித்த ஒருவருக்கும், மும்பையில் இருந்து பனாஜிக்கு கடந்த 19-ம் தேதி சென்ற ஏஐ-661 விமானத்தில் பயணித்த ஒருவருக்கும், டெல்லியிலிருந்து கோவாவுக்கு, கடந்த 22-ம் தேதி சென்ற ஏஐ-883 விமானத்தில் பயணித்த ஒருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட இந்த 4 விமானங்களிலும் அதே தேதிகளில் பயணித்தவா்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவதாக ஏா் இந்தியா கூறியுள்ளது.