கேரளாவில் ஒரே நாளில் 49 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி
May 26 2020 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் நேற்று ஒரே நாளில், 49 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 532 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும், 359 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது