கேரளாவில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை - திருவனந்தபுரம் பகுதியில் பரவலாக பெய்த மழையால் தணிந்தது கோடை வெப்பம்
Jun 1 2020 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியது. தலைநகர் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழைக்கான சாதகமான அம்சங்கள் இன்று முதல் தெரியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கேரளாவில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால், சுற்றுவட்டாரங்களில் வெப்பம் தணியும் என்றும், வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியசுக்கு கீழ் குறைந்துவிடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதனிடையே, கேரளாவில் மேற்கு கடற்கரையோர அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறக்கூடும் என்றும், இந்த புயல் மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை நோக்கி நகரும் என்றும், இதன் காரணமாக, வரும் 3 மற்றும் 4-ம் தேதிகளில் அம்மாநிலங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.