வளர்ப்பு யானையுடன் அச்சமின்றி விளையாடி மகிழும் 2 வயது குழந்தை - கேரளாவில் அரங்கேறி வரும் அதிசய நிகழ்வு
Jun 3 2020 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவை சேர்ந்த இரண்டே வயதான பெண் குழந்தை, யானை ஒன்றுடன் அச்சமின்றி சர்வ சாதாரணமாக விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், ஸ்ரீகந்தேஸ்வரர் கோவிலில் பணிபுரியும் தம்பதிகளின் 2 வயது குழந்தையான பாமா, தனதுவீட்டில் வளர்க்கப்பட்டு வரும் உமாதேவி என்ற யானையுடன் மிகவும் நட்பாக பழகி வருகிறாள். குழந்தை பாமா, 6 மாதங்களாக இருந்தபோதே யானையுடன் பயமில்லாமல் விளையாடப் பழகிவிட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மகளுக்கும் யானைக்குமான பாசத்தை பார்த்து வியந்த தந்தை, யானைக்கு குழந்தை தேங்காய் கொடுப்பது, குழந்தையின் தலையில் யானை தனது தும்பிக்கையில் பாசத்துடன் தட்டுவது போன்ற காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.