டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை அவசியமில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
Jun 5 2020 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை அவசியமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில், கடந்த மார்ச் மாதம் மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாட்டினர் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானோருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அந்த அமைப்பின் தலைவர் திரு. மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாநாட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கலந்துகொண்டதாக 83 வெளிநாட்டினர் மீது, குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரியா பண்டிடா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லி மாநாடு தொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதால், சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.