மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய தடை - கொரோனாவால் ஏற்பட்ட செலவை கட்டுப்படுத்த நடவடிக்கை
Jun 5 2020 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா நெருக்கடி காரணமாக மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக புதிய திட்டங்களுக்கு ஓர் ஆண்டுக்கு தடை விதித்து, மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தேசிய ஊரடங்கால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய, சுயசார்பு இந்தியா என்ற பெயரில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. மேலும், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் செலவினங்களை மேலும் குறைக்கும் நடவடிக்கையாக, ஓர் ஆண்டுக்கு புதிய திட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. பிரதமரின் காரிப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், வேறு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.