ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் : கர்நாடகாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவு இல்லை
Jun 5 2020 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவின் ஹம்பியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக மத்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்த நிலையில், இதனை, அம்மாநில நிலநடுக்க ஆய்வு மையம் மறுத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூர் மாவட்டத்தில் இன்று காலை 6.55 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4 புள்ளி 7 ஆக பதிவானது. அதே நேரத்தில், கர்நாடக மாநிலம் ஹம்பி மாவட்டத்திலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் நான்காக பதிவானதாகவும், மத்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இந்நிலையில், ஹம்பியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக எந்த பதிவும் இல்லை என, கர்நாடக மாநில நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. கர்நாடகா நிலநடுக்கம் குறித்து இருவேறு கருத்துகள் நிலவுவதால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.