புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
Jun 5 2020 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவதால், பல மாநிலங்களின் கிராமபுறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தேசிய ஊரடங்கால், பல்வேறு மாநிலங்களில் சிக்கிக்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால், பல மாநிலங்களின் கிராமங்களிலும் கொரோனா பாதிப்பு 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக, ராஜஸ்தான், ஆந்திரா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநில கிராம புறங்களில் அதிக பாதிப்பு பதிவாகிவுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே நகர் புறங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.