அக்டோபர் மாதம் 4-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு : யு.பி.எஸ்.சி. அறிவிப்பு
Jun 5 2020 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி நடைபெறும் என்றும், பிரதானத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் என்றும் யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்திய பொருளியல் தேர்வுகள் வரும் அக்டோபர் 16-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக யு.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.