ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் - அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தல்
Jul 9 2020 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில், அவை எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்ற விவரம் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டுத் துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, வாடிக்கையாளர்களுக்கு, பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்ற விவரத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று நிறுவன பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இந்த உத்தரவை வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.