நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் சீசனும் துவக்கம் : நிலைமை மோசமாக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை
Jul 12 2020 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல் சீசனும் துவங்கியுள்ளதால், நிலைமை மோசமாக வாய்ப்புள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதி அளிக்கும் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நச்சுயிரியல் நிபுணருமான திரு.ஷாஹித் ஜமீல், 2016 - 2019 ஆண்டுகளின் தரவுகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஒன்று முதல், இரண்டு லட்சம் பேர் வரை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தென் மாநிலங்களில், ஆண்டு முழுதும், பலர், டெங்கு வைரசால் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில், பருவமழை காலத்திலும், குளிர் காலத்திற்கு முன்பும், இந்த வைரஸ் தீவிரமடைகிறது - கொரோனாவுக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் தனித்தனி பரிசோதனைகள் செய்யவேண்டும் என்பதால், மருத்துவ துறையினருக்கு, இது பெரும் சவாலாக இருக்கும் - எனினும், இந்தியாவில், டெங்கு காய்ச்சலுக்கு, சிறந்த முறையில் பரிசோதனைகள் நடத்தி, சிகிச்சை அளிப்பது ஆறுதல் அளிப்பதாகவும் ஷாஹித் ஜமீல் கூறினார்.