கேரள தங்கக்கடத்தல் விவகாரம் - கைதான ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 14 நாட்கள் சிறையில் அடைக்க கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு
Jul 13 2020 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், சரக்கு விமானத்தில் 30 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த, சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்ற, தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமாரை கைது செய்தனர். இக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய இருவரையும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் கைது செய்தனர். இருவரும் கொச்சியில் உள்ள NIA நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.