தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 48 பேருக்கு கொரோனா : ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வைரஸ் தொற்று இல்லை
Jul 13 2020 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜனுக்கு வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் காவலர்கள் 28 பேர், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 20 பேர் என மொத்தம் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் உட்பட அங்கு பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், திருமதி. தமிழிசை சௌந்தரராஜனுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இதனை அவரே ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தான் கொரோனா சோதனை செய்து கொண்டதாகவும், தனக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.