கொரோனா உயிரிழப்புகளை குறைக்க பல்ஸ் ஆக்ஸி மீட்டரால் பெரிதும் உதவி : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
Jul 13 2020 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா உயிரிழப்புகளை குறைக்க பல்ஸ் ஆக்ஸி மீட்டர் பெரிதும் உதவியதாக டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. அங்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று 2 ஆயிரத்திற்கும் குறைவானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கு குணமடைவோர் விகிதம் 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளை குறைக்க, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் பெரிதும் உதவியதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல்ஸ் ஆக்ஸி மீட்டர் எனப்படும் பாதுகாப்பு கவசம் கொண்டு, கொரோனா உயிரிழப்பை குறைக்க முடிந்ததாகவும், ஆக்சிஜன் அளவு குறைந்தால் நோயாளிகள் தங்களை தொடர்பு கொள்வார்கள் எனவும், அவர் தெரிவித்தார். உடனே வீட்டிற்கு ஆக்சிஜனை அனுப்பியோ அல்லது நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோ, சிகிச்சை அளித்ததாகவும் திரு. கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.