இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரம் பேருக்‍கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 834 பேர் பலி

Aug 12 2020 2:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 61 ஆயிரம் பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 23 லட்சத்து 29 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் நாளுக்‍கு நாள் கொரோனா வைரசின் தாக்‍கம் அதிகரித்து வருகிறது. இதனைக்‍ கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டும், வைரஸ் தொற்றையும், உயிரிழப்பையும் கட்டுக்‍குள் கொண்டு வரமுடியவில்லை.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 963 பேருக்‍கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 29 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 948 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 16 லட்சத்து 39 ஆயிரத்து 599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 834 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது. இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00