கேரள விமான விபத்து - உதவி எண்கள் அறிவிப்பு : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்
Aug 12 2020 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள விமான விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து 185 இந்தியர்களுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம், கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. 35 அடி பள்ளத்தில் விழுந்த விமானம் இரண்டாக உடைந்தது. இந்த கோர விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், கேரள விமான விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 0483 2719321, 0483 2719318, 0483 2719493 என்ற எண்களில், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு, விவரங்களை பெற முடியும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.