குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை - செயற்கை சுவாசக்‍ கருவிகள் மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை

Aug 12 2020 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் உயிருக்‍குப் போராடி வருகிறார். அவருக்‍கு செயற்கை சுவாசக்‍ கருவிகள் மூலம் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜிக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி திரு. பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு, செயற்கை சுவாசத்துடன் உள்ள அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. செயற்கை சுவாசக்‍ கருவிகள் மூலம் மருத்துவர்கள் அவருக்‍கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00