புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Aug 12 2020 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரேநாளில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆறாயிரத்து 381ஆக அதிகரித்துள்ளது. இதில், இரண்டாயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றாயிரத்து 669 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.